World news

அமெரிக்காவின் நியூயார்க்கில் கடந்த 2001–ம் ஆண்டு செப்டம்பர் 11–ந்தேதி இரட்டை கோபு, தாக்குதல் நடந்தது. இத்தாக்குதலில் அல்கொய்தா தீவிரவாதிகள் ஈடுபட்டனர். இத்தாக்குதலில் முக்கிய குற்றவாளியான ஷகாரியாஸ் மொசாய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியவர்களில் இவரும் ஒருவர்.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இவர் தற்போது அமெரிக்காவின் கொலோரபோவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கு விசாரணையின் போது இவர் கோர்ட்டில் வாக்கு மூலம் அளித்தார்.

அதில் அமெரிக்காவில் கடந்த 2001–ம் ஆண்டு செப்டம்பர் 11–ந்தேதி நடந்த தாக்குதலுக்கு சவுதி அரேபியா மன்னர் குடும்பத்தின் முக்கிய அதிகாரிகள் ஒரு குறிப்பிட்ட அளவு நிதி உதவி அளித்தார்கள் என தெரிவித்துள்ளார்.

அந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதை சவுதிஅரேபியா அரசு திட்ட வட்டமாக மறுத்துள்ளது. இந்த விவகாரத்தில் சவுதி அரேபிய அரசுக்கோ, அதிகாரிகளுக்கோ, மன்னர் குடும்பத்துக்கோ எந்த வித தொடர்பும் இல்லை. அதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment